சிறுவாணி ஆறு

சிறுவாணி நதி 






                  




பெயர்க்காரணம் 





சிறுவாணி நதி கோயம்பத்தூர்  நகரின்  குடிநீர்த்  தேவைகளை  நிறைவேற்றும் , உலகில்  மிக  சுவையான  துய்மையான  குடிநீர்  மூலங்களில்  ஒன்றாகும் .

கேரளாவின்  பாலக்காடு  மாவட்டம்  மன்னார்காடு  தாலுகாவில்  உள்ள  அட்டப்பாடி  பள்ளத்தாக்கில் இந்நதி  துவங்குகிறது 


.
                         







இது  பவானி  ஆற்றின்  துணை  நதியாகும் . இந்நதி  ஈரோடு  மாவட்டம்  சத்தியமங்கலத்தில்  நுழையும்போது  குண்டாற்றுடன்  சேருகிறது


சிறுவாணி அருவி 

சிறுவாணி அருவி  அல்லது கோவைக்   குற்றாலம்  என்பது  கோயம்புத்தூர்  நகரின்  மேற்கே 35 கி .மீ  தொலைவில்   மேற்குத் தொடர்ச்சி மலையில்  அமைந்துள்ளது .





                                   





இந்த  அருவி சிறந்த சுற்றுலாத் தலமாகவும்  உள்ளது . பாதுகாக்கப்பட்ட  கானகப்பகுதியில்  அமைந்துள்ள இந்த  அருவிக்கு  இரவு  நேரங்களில்  சுற்றுலாப்  பயணிகள் செல்ல அனுமதி இல்லை .

சிறுவாணி  அணை என்பது கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 46கி .மீ  தொலைவில் அமைந்துள்ள அணையாகும் .இந்த  அணை  தமிழகத்தின் கோயம்புத்தூர்  மாநகரின்  குடிநீர்  தேவைக்காக சிறுவாணி நதிக்குக் குறுக்கே கட்டப்பட்டது  இந்த அனையயைச்  சுற்றி பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதியாகும் .

முத்திகுளம் மலை இந்த அனைக்குக் கிழக்கு புறம்  அமைந்துள்ளது .இயற்கையான  நீர்வீழ்ச்சி  இருப்பது இதன்  கூடுதல்  சிறப்பாகும் .அணையும்  நீர்வீழ்ச்சியும்  சிறந்த  சுற்றுலாத்  தலங்களாகும் .

சிறுவாணி அணை 


கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை  நிறைவேற்ற ஆங்கிலேயர்களால்  கட்டப்பட்ட சிறு  நீர்த்தேக்கம் , வளர்ந்து  வந்த  நகரின்  தேவைகளை  ஈடுகட்ட  முடியாத  நிலையில் ,1969 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் கேரளா அரசும்    ஆய்வுகள்  நடத்தி  ஆகத்து   19,1973   அன்று  ஓர் புதிய  அணையைக்  கட்ட  உடன்பாடு  கண்டனர் . 




                



இதன்படி  கோவை  நகரின் வீட்டு ,  சமூக  மற்றும்  தொழிற்சாலை  பயன்பாடுகளுக்குத்  தேவையான  நீரைத்தேக்கிட  (1300 மில்லியன்  கனஅடி )  கேரள  அரசு சிறுவாணி அணையைக்   கட்டி  அதற்கான  கேரள மாநில  நிலத்தை  தமிழகத்திடம்  பராமரிப்பிற்கு  ஒப்படைத்தது .

இந்த  அணையின்  இருபுறமுள்ள  வாயில்களும்  முறையே  தமிழக  மற்றும்  கேரள  கட்டிட  வடிவமைப்பைக்  கொண்டு  அழகாக  கட்டப்பட்டது . இதனால்  அமராவதி  அணை  நீர் மட்டம்  உயர்ந்து  உள்ளது .



சிறுவாணி அணை உயர்வு 



தற்போது  அணையில்  63.32  அடி  தண்ணீர்  உள்ளது . திருமூர்த்தி  அணையின்  நீர்  மட்டமும்  உயர்ந்து  வருகிறது .

நீலகிரி  மாவட்டத்தில்  தொடர்ந்து  பெய்து  வரும்  மலை  காரணமாக  அங்குள்ள எமரால்டு  அணை நிரம்பி  வருகிறது  . அணையின்  மொத்த  கொள்ளளவு  184 அடியாகும் .தற்போது  135  அடி  தண்ணீர்  உள்ளது .






                   





ஊட்டி  பைக்காரா   அணையில்  தற்போதைய   நிலவரப்படி  85  அடி  தண்ணீர்  இருக்கிறது . ரேலியா  அணையில்   41.8 அடி  தண்ணீர்  உள்ளது .







கோவையில்  தொடர்ந்து  பெய்து  வரும்  மலை  காரணமாக  பேரூர்  படித்துறையை  தொட்டபடி  தண்ணீர்  பெருக்கெடுத்து  ஓடுகிறது .


குளங்கள் இணைப்பு 

மேலும் பேரூர்  சொட்டையாண்டி குட்டை , சுண்ணாம்பு கால்வாய்  தடுப்பணை ,  செங்களம் , நரசாம்பதி  குளம் ,  கோளரம்படி  குளம், நொய்யல்  ஆற்றின் முதல்  குளமான  உக்குளம்  உள்ளிட்ட  குளங்கள்   நிரம்பி  வருகிறது .  ஏரிகளுக்கும்  நீர்  வரத்து  அதிகரித்து  உள்ளதால்  அவைகளும்  வீக்கமாக  நிரம்பி  வருகிறது .




                        







சிறுவாணி  அணை  நிரப்பி  வருவதால்  கோவை  மக்கள்  மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.   கோவை  குற்றாலத்துக்கும்  தண்ணீர்  வரத்து  அதிகரித்துள்ளது  .  அங்குள்ள  இரும்பு  பாலம்  வரை தண்ணீர்  வருவதால்  சுற்றுலா  பயணிகளுக்கு  தொடர்ந்து  அனுமதி  மறுக்கப்பட்ட  உள்ளது . கோவை  , நீலகிரி  மாவட்ட  எல்லை  வனப்பகுதியில்  உள்ள  பில்லூர்  அணையின்   மொத்த  கொள்ளளவு  100  அடியாகும் . இந்த  அணையில்  தற்போது  97  அடி  தண்ணீர்  உள்ளது  .





                   



அணையில்  இருந்து  வினாடிக்கு  14 ஆயிரம்  கன   அடி  தண்ணீர்  திறந்து  விடப்பட்டு  வருகிறது .  இதனால் பவானி   ஆற்றில்  5-வது  நாளாக  வெள்ள  பெருக்கு  ஏற்பட்டு  உள்ளது .

பொள்ளாச்சி   அருகே  ஆழியாறு  அணை  உள்ளது . பருவ  மழை  காரணமாக  இந்த  அணை   கடந்த  3 நாட்களில்  2 அடி  உயர்ந்துள்ளது . இந்த  அணையில்  தேக்கப்டும்  தண்ணீர் பழைய ,புதிய  ஆயக்கட்டு ,  பாசனத்துக்கும்  கேரளாவுக்கும்  பகிர்ந்து  தரப்படும் .

கோவை :





                



தொடர்   மழை  காரணமாக  கோவை , திருப்பூர்  மாவட்டத்தில்  உள்ள  அணைகள் , குளங்கள்  நிரம்பி  வருகிறது .

நீலகிரி  மற்றும்  கோவை  மாவட்டங்களில்  தொடர்  மழை  பெய்து  வருகிறது . இதனால்  இம்மாவட்டங்களில்  உள்ள   அணைகள் , குளங்கள்  வேகமாக  நிரம்பி  வருகிறது .


கோவை  மக்களின்  நீராதாரமாக  விளங்கும்  சிறுவாணி  அணை  கேரள  வன பகுதியில் உள்ளது .

கேரளாவில்  பெய்து  வரும்  மழை  காரணமாக  சிறுவாணி  அணைக்கு  நீர்  வரத்து  அதிகரித்து  உள்ளது  . இந்த  அணையில்  தற்போது  30.7 அடி  தண்ணீர்  உள்ளது .   இன்னும்  19.3 அடி  நீர்  வந்தால்  அணை  முழுவதும்  நிரம்பும் .






No comments:

Post a Comment

நொய்யலாறு

நொய்யலாறு :     தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ,சிற்றோடைகள...