சினிமா

முத்துக்கு முத்தாக 






ரு சிறிய கிராமம் .அதில்  அழகான  குருவி  கூட்டின்  போல்  ஒரு  குடும்பம் .கடல்  அளவை  அன்பை  கொட்டி  வளர்த்த  அம்மா , அப்பா , எப்பொழுதும் ஒருத்தரை  ஒருத்தர்  விட்டு  கொடுக்காத  ஐந்து  அண்ணன்  தம்பிகள் .

இதில்  உண்மையை கூற  வேண்டும்  என்றால்  இதுவரை  எவ்வளவோ  திரைப்படம்  பார்த்துள்ளேன்  .எவ்வளோவோ  நகைச்சுவை .ஆனால்  அதில்  ஓன்று  கூட  என்  மனதைக்  கவர்ந்த  திரைப்படம்  இல்லை .ஆனால்  இந்த  "முத்துக்கு  முத்தாக "  படம்  பார்த்த   அறை  மணி  நேரத்திலே  என்  கண்கள்  கலங்கின .இதில்  ஒரு  தாயின்  அன்பு ,அக்கறை ,பயம்  எவ்வளவு  உண்மையாகவும்  ,தூய்மையாகவும்  இருக்குமோ  அதைப்போன்றே  நடிகை  சரண்யாவும்  நடிப்பை  கொட்டியுள்ளார் .









இந்த  படத்தில்  சரண்யா  இரவு  முழுவதும்  வியாபாரத்துக்காக  கண்விழித்து  அடுப்பங்கரை  முன்னிலையில்  முறுக்கு ,அதிரசம்  செய்து  விற்பனை செய்வாள் . அதை  பார்க்கும்போது  என்  அம்மாவும்  இதைப்போல்  எங்களை  வளர்க்க  அடுத்தவரிடம்  என்  பிள்ளைகள்  கையேந்தும்  நிலை  ஒருபோதும்  வர  கூடாது  என்பதற்காக  இரவு  முழுவதும்  பைகள்  தச்சு  , பொழுது  விடிவதற்குள்  எழுந்து  சமையல்  செய்து  ஏழு  மணி  அளவிற்கு எங்களை  எழுப்பி  கிளப்பி  பள்ளிக்கு  தன்  தந்தையிடம்  ஒப்படைத்து  கடலை  போடுவதற்கு  சென்றுவிடுவாள் .








இதில்  தந்தைக்கும்  குறைந்த  கதை  இல்லை  மிகவும்  அழகான  கதையை  உருவாக்கியுள்ளார்  படத்தில்  இயக்குநர்  .  இதில்  அவர்  ஒவ்வொரு  கடைக்கும்  சென்று  தன்  மனைவி  செய்த  பலகாரத்தை  வியாபாரம்  செய்துவிட்டு  மிதிவண்டியில்  வீடு  திரும்புவார் . இதை  பார்க்கையில்  என்  தந்தையும்  என் சிறு வயதில்  என்  இரண்டு  சகோதர்கள் , நான்  ஆகிய  மூன்று  பேரையும்  நடக்கக்கூடாது  என்று  சைக்களில்  வைத்து  பள்ளியில்  விடுவார் .அதன் வலி  அப்போது  எனக்கு  தெரியவில்லை  .என் தந்தையின்  வியர்வையின்  பின்னால்  தான்  நானும்  என் சகோதர்களும்  வளர்ந்தோம்  என்று  எப்போது  உணர்ந்தேன் .

அந்த  சிறுவயதில்  எங்கள்  மூன்று  பேருக்கும்  தலா  ஒரு  ரூபாய்  என்று  மூன்று  ரூபாய்  கொடுப்பார்  என் தந்தை  . அப்போது  அதன்  பின்  என்  தந்தை  ,தாயின்  கஷ்டம் ,உழைப்பு  புரியவில்லை  தெரியவில்லை .








அந்த  படத்தில்  தந்தையின்  கதாபாத்திரத்தில்  என்  மனதை  கவர்ந்த  நிகழ்ச்சி  தன்  பிள்ளைகள்  அழுத  பொழுது  தன்  தோளில்  தூக்கி  குஷி  படுத்துவர்  அது  போன்று  என் தந்தையும்  நான்  அழுதபோது ,என் உடல்நலம்  சரி  இல்லாமல்  போன போது  என் தந்தை அவர்  தோளில்  என்னை  தூக்கி  செல்வார் . மற்றும்  என் அப்பாவும் கலப்பை  பிடித்து  எங்களை  வளர்த்து  வந்தார் . நாங்கள்  உண்ண  ஒவ்வாரு  சோற்று  பருக்கையின் பின்  என்  தந்தையின்  இரத்தம்  உள்ளது .



அந்த  படத்தில்  சரண்யா ஒரு  வார்த்தை  சொல்வாள் . என்  பிள்ளைகள்  முதல  சாப்பிடட்டும்  அவர்கள்  உண்ட  மீதமுள்ள  உணவை  தான்  இவள்  உண்ணுவாள்  .அதை  போல  தான்  என்  தாயும்  நாங்கள்  உண்டு  மீதமுள்ள  உணவை  தான்  அவள்  உண்டு  உயிர்  வாழ்கிறாள் .








இந்த  படத்தில்  தீபாவளிக்கு  பட்டாசு  வெடித்து  மகிழ்ந்ததை   கண்டபொழுது  என்  சிறு  வயது   என்  யாபகத்திற்கு  வந்தது . தீபாவளிக்கு  முதல்  நாள்  இரவு  தன  கடனை  கூறி  என்  தந்தை  எங்களுக்கு  ஆடை  எடுத்து  தருவார் . கடன்  கூறும்   போது  அந்த  கடைக்காரர்  என்  தந்தையை  ஏளனமாக  பார்ப்பார் . அப்போது  அதன்  அர்த்தம்   தெரியவில்லை .இப்போ  நினைக்கும்போது  என்  மனது  நெருப்பில்  போட்ட  விறகைப்போல்  வேகுகிறது .



அதில்  அன்பின்  சின்னமாக  வளர்ந்த  ஐந்து  அண்ணன்  தம்பிகளை  பார்க்கும்போது  என் சகோதர்கள்  நினைவிற்கு  வருகிறார்கள் .    நாங்கள்  இதைப்போன்று  சண்டைகள்  எப்போதும்  இருந்து  கொண்டே  தான்  இருக்கும் . என்  அம்மா  சமாதானம்  செய்துக்  கொண்டே  இருப்பார்  .









இதில்  என்  மனதை  நோகடித்த  நிகழ்ச்சி  என்றால்  திருமணம்  செய்து  வந்த  மருமகள்  குணம்  சரி இல்லாமல்  ஐந்து  பிள்ளைகள்  மட்டுமே  "உலகம் "   என்று  வாழ்ந்து  வந்த  இவர்கள்  அவர்களிடம்  முன்  அவமானமே  பட்டு  பிள்ளைகள்  இருந்தும்  அனாதை  போல்   இருப்பதை   மனம்  நொந்து  ,விஷத்தை  உண்பர்  மற்றும்  இறந்துவிடுவார் .






பின்பு  அவர்கள்  இறப்பில்  ஒன்றுகூடுவார்  .இப்போது  கூடி   ஒன்றும் இல்லை .அவர்கள்  உயிருடன்  வாழும்  போதே  சேர்ந்து  வாழ்ந்திருந்தால்  அவர்கள்   பட்ட  துன்பத்திற்கு  ஒரு  மகிழ்ச்சி  மனநிறைவு  கிடைத்திருக்கும்  . இப்போது  மனம்  கசப்போடு  சாமியிடம்  சென்றனர் .














குறிப்பு :



எல்லா  பிள்ளைகளுக்கும்  என் வேண்டுகோள்  தன்னை  பெற்று  எடுத்த  தாய் தந்தையை  ஒரு போதும் மனம் நோக்குர  போல் நடக்காதீங்க . அவர்கள்  படும்  வேதனை  நம்மை வாழவே  விடாது .இருக்குற வரைக்கும் தன்  பெற்றோர்களோடு  வாழ்ந்து  அவர்களை  மகிழ்ச்சி  படுத்துங்கள் ................. 


No comments:

Post a Comment

நொய்யலாறு

நொய்யலாறு :     தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ,சிற்றோடைகள...