Thursday, 16 August 2018

பாலாறு

பாலாறு   :

பாலாறு இந்தியாவின்  மூத்த ஆறுகளில் ஒன்று 
                                       
 


பாலாறு  பிறந்த நந்திதுர்கம் :

 

                கர்நாடக மாநிலத்தில்  சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலை பாலாற்றின் பிறப்பிடம் .கடல் மட்டத்தில் இருந்து 4,851 அடி
 உயரமுள்ளது .பெங்களுருவில் இருந்து சுமார் 60 கி.மீ.

தொலைவில்  இருக்கும் மிகக் சிறந்த கோடை வாசஸ்தலம்.

முன்னொரு காலத்தில் குஷ்மந்தகிரி என்று அழைக்கப்பட்ட நந்திமலையை,
சோழர்கள் ஆட்சிக்  காலத்தில் அனந்தகிரி  என்று அழைத்துள்ளனர்.சிவனின்  வாகனமான நந்தியின் தோற்றத்துடன்  இருந்த அனந்தகிரி மலை  பிற்காலத்தில் நந்திதுர்கமாக  பெயர் மாறியது.அடர்ந்த வனப் பகுதியாக இல்லாமல் சாதாரணமாக பசுமை நிறைந்த  மலையாக நந்திதுர்கம்  இருப்பது ஆச்சரியம் .அடிவாரத்தில் இருந்து மலையை நோக்கிய நந்தி சிலைதான் நந்திதுர்கத்துக்கு செல்லும் வழிகாட்டியாக இருக்கிறது.

வறண்டுபோன  ஊற்று :

                   நெல்லிக்காய் பசவன்னா  சிலைக்கு அருகில் பிரம்மாசிரமத்திலிருந்து சற்று தூரத்தில் பாலாறின் நதி மூலம் இருக்கிறது. 4,800 அடி உயரத்தில் இருக்கும் இந்த ஊற்றில் பொங்கி வரும் பாலாற்றுக்கு கல் மண்டபம் கட்டியுள்ளனர். இது இன்று பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது.இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து விடும் அபாயமும்  இருக்கிறது .
ஊற்றில் பொங்கிப் பெருக்கெடுத்த பாலாறு  மலை அடிவாரத்தை நோக்கி ஓடைகளாய் பாய்கிறது.பெரிய அளவிலான ஓடைகள் இல்லாவிட்டாலும் 
சிறு சிறு ஓடைகள் அருகில் இருக்கும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுகிறது.
கோடை  வாசஸ்தலம் என்ற சுற்றுலா அடையாளத்தால் வேகமாய் வளர்ந்து வரும் கான்கிரிட் கட்டிடங்களால் நந்திதுர்கத்தின் அடையாளங்களும் பாலாறின் மூலமும்  சிதைந்து கொண்டிருக்கிறது.



 நீர் பாசன வசதி பெரும் பகுதிகள்  :

     பாலாறு 50 குடிநீர்த் திட்டங்களுக்கு ஆதாரமாக  உள்ளது.தாம்பரம்,பல்லாவரம் ஆகிய பகுதிகளும் இதில்  உள்ளடக்கம்.இத்திட்டத்தின் மூலம் வெள்ளப் பெருக்கு காலங்களில் பெண்ணையாற்றில் இருந்து  3 டி .எம் .சி  உபரி நீர்  பாலாற்றில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இணைப்பு கால்வாய் வழியாக திருப்பி விடப்படும்.

இத்திட்டத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு குடிநீர் வசதி மற்றும் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.

       
          
திருநெல்வேலி                                                               

வேலூர் மாவட்டம் புல்லூர் பாலாறு :

தமிழ்நாட்டில் மட்டுமே  சமதளத்தில்  பாலாறு பரந்து விரிகிறது. இங்கு
தொடங்கி 222 கி.மீ. தூரம் பயணிக்கும் பாலாறு வயலூர் வரை பயணிக்கிறது.கோடை காலத்தில் ஆற்றில் வெள்ளம் வராவிட்டாலும் விவசாயிகள்  நம்பிக்கைக்கு உரிய ஜீவநதியாக இருந்துள்ளது. ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்ததால் என்னவோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு அடுத்த நெல் உற்பத்தி செய்த மாவட்டம் என்ற பெருமை அப்போதைய வடாற்காடு (வேலூர் ,திருவண்ணாமலை) மாவட்டத்துக்கு  உண்டு.பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஊற்று கால்வாய் இருந்தது. ஆற்றின் கரையில் வெட்டினாலே ஏற்படும் ஊற்று நீரிலே  விவசாயம் செழித்திருக்கிறது.


நந்தி மலையில் சிற்றாறாக வரும் பாலாறு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழக எல்லைக்குள் நுழைகிறது.  வழியில் பல துணை ஆறுகளுடன் ஒன்றிணைந்து 386 கிலோ மீட்டர் பயணப்பட்டு செங்கல்பட்டின் உய்யாழிக்குப்பம் அருகே வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.

கி.பி .1857-ல் ஆற்காடு நகருக்குக் கிழக்கில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் வாலாஜாபேட்டை அருகில் பாலாற்றின் குறுக்கே அணை ஒன்று காட்டப்பட்டது . இங்கிருந்து காவேரிப் பாக்கம் ,பூண்டி,மாமண்டூர் ஏரிகளுக்கு நீர் பிரித்து அனுப்பப்படுகிறது. அந்த ஏரிகளின் பாசனம் பெரும் விவசாய நிலங்களும் அணை கட்டுக்கு அருகில் உள்ள சாத்தம்பாக்கம், குடிமல்லூர் , திருமலைச்சேரி போன்ற சுற்று வட்டாரக் கிராமத்து விவசாய நிலங்களும் விளைச்சலால் செழிப்போடு விளங்கின .
கடந்த  நூற்றாண்டின்  தொடக்கத்திலே கர்நாடக மாநிலத்தில் பாலாற்றின் தண்ணீர் வரத்து தடுக்கப்பட்டுவிட்டது . 1992-க்கு  பிறகு பாலாற்றில் நீர் வார்த்து குறைத்து போனது.

பாலாய் போன  பாலாறு : 

 பாலாற்றின் கரையோர நகரங்களில் தோல் பதனிடும் தொழில் பல ஆண்டுகளாகவே நடை பெற்று வருகிறது. பழங்காலத்தில் தோல் பதனிட மரப்பட்டைகள்,கடுக்காய்  கொட்டைகள் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டுதான் தோல் பதனிட்டார்கள். அதனால் எந்தவிதவிதமான பாதிப்பும் இல்லை. இப்போது 200-க்கும் மேற்பட்ட ரசாயணப் பொருட்களைப் 
பயன்படுத்திகிறார்கள் . அந்த ரசாயன கழிவுகள் எல்லாமே பாலாற்றில் தான் கலக்கின்றன. இது தவிர ஒவ்வொரு நாளும் ஏராளமான திடக் கழிவுப் பொருட்களும் பாலாற்றில் குப்பைகளாகக் கொட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் நச்ச்சுத்தன்மை அடைந்து பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்கள்  களர்நிலங்களாக மாறிவிட்டன.
விளைநிலங்களின்  பாதிப்பை தொடர்ந்து இந்தப் பகுதியில் குடிநீரும் சுவை மாறி மாசுபட்டுவிட்டது.  நகரங்களைப்  போல சுற்று வட்டார கிராம மக்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி குடிக்கவேண்டிய அவளை நிலைக்கு ஆளாகி உள்ளனர் . 
ரசாயண கழிவுகளாலும், மணல் கொள்ளையாலும் பாழாய் போகின்றது .
வேலூர்  மாவட்டத்தில் 1226 தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டத்தின் பங்கு 37 விழுக்காடு ஆகும். தோல்  தொழிற்சாலைகள் வெளியேற்றும்  சயனைடு ,பாதரசம்,குரோமியம் உள்ளிட்ட வேதியியல்  ரசாயன கலவைகள் நேரடியாக பாலாற்றில் கலக்கின்றன.
' காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையோரத்தில் சாக்கடையாக                       ஓடும்        பாலாறு     ' 

பாலாற்றில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் ராட்சத ஆழ்த்துளை கிணறுகள் மூலம் உறிஞ்சப்படுகின்றன . அதே போல பாயலூர் மற்றும் ஆயப்பாக்கம் கிராமங்களில் இருந்து கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
'காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள பாலாற்றுப் பாலம் சீமைக்கருவேல மரமாக மண்டிய அவலம் '

பாலாறு என்பது வட தமிழகத்தின் இயற்கை வளங்களை குவித்து வைத்திருக்கும் ஒரு பேருயிர் .அது உருவாக்கிய வளங்களும்,வாழ்க்கையும் சுற்றுச்சூழலும் ஏராளம். உலகமயத்தின் அகோரப்பசிக்காக இந்த ஆற்றின் மைந்தர்களும் அவர்கள்  உருவாக்கிய வாழ்க்கையும் இன்று அழிந்து கொண்டிருக்கிறது .

No comments:

Post a Comment

நொய்யலாறு

நொய்யலாறு :     தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ,சிற்றோடைகள...