மணிமுத்தாறு நதி
மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அணை என்பது தமிழ்நாட்டின் ,திருநெல்வேலி மாவட்டத்தில் மணி முதத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஓன்று . இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேறி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக உருவானது .
மணிமுத்தாற்றின் இணைப்பு
இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும் அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டிருப்பதாலும் மேற்கண்டவாறு வழங்கப்படுகிறது .
இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது . இதன் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது .
நீர் மட்டம் உயர்வு
இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது .
இந்த நீர் மழைக்காலத்தில் தாமிரபரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைப் தடுக்க அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அனைத் திட்டம் இது , சிங்கம்பட்டி அருகே 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த அணை .
இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம் . அணையில் 5,511 மில்லியன் கன அடி கொள்ளளவுடையதாகும் . அணையின் மொத்த நீளம் 3.கி .மீ .
அணையின் இணைப்பு
அணையில் தேக்கப்படும் நீரின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு வீரவநல்லூர் ,கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலூக்காவின் வடக்குப் பகுதிகள் , திசையன்விளை ஆகிய பகுதிகளில் சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .
மேற்கண்ட பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக எந்த அணை உள்ளது . மணிமுத்தாறு அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சிற்றுலாத் தலமாக விளங்குகின்றன .
காமராசரின் திட்டம்
சாதாரண காலங்களில் எந்த நீரின் அளவை தாமிரபரணியுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவு என்பதால் இது வெறும் மழைக்கால வெள்ளநீர் வெளியேற்று ஆறாகவே இருந்து வந்தது . எனவே மழைக்காலங்களில் இந்த வெள்ளநீர் தாமிரபரணியில் கலந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க காமராசரால் கொண்டு வரப்பட்ட திட்டமே மணிமுத்தாறு திட்டம் .
இதன் மூலம் சேமிக்கப்படும் நீர் நெல்லை மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகளான தெற்கு வீரநல்லூர் , கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள் வழியாக மிகவும் வறட்சிப் பகுதிகளான திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீராகவும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது .
மணிமுத்தாறு பேரூராட்சி
அணைக்கட்டு மற்றும் அருவி நல்ல சுற்றுலாத் தலங்களாக அமைகிறது . மேலும் தமிழ்நாடு காவல்துறையின் இரண்டு காவலர் பயிற்சி பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன .
பொதுமக்கள் இங்கு சிறிதளவே வாழ்கின்றன .மலைப் பகுதியான மாஞ்சோலை மற்றும் கோதையாருக்கு மணிமுத்தாறே நுழைவு வாயில் என்பதால் மணிமுத்தாறு ,மாஞ்சோலை , கோதையாறு பகுதிகளை இணைத்து மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சி அமைக்கப்பட்டுள்ளது .
நீர் மட்டம்
சேர்வலாறு அணையில் இருந்து 1659 கன அடி , கடனாநதி அணையில் இருந்து 366 கன அடி ,ராமநதி அணையிலிருந்து 158.46 கன அடி , கருப்பா நதி அணையில் இருந்து 150 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment