மணிமுத்தாறு  நதி 



                                 



மணிமுத்தாறு அணை


                            

      மணிமுத்தாறு  அணை  என்பது   தமிழ்நாட்டின்  ,திருநெல்வேலி  மாவட்டத்தில்  மணி முதத்தாற்றின்  குறுக்கே  கட்டப்பட்ட  அணைகளுள்  ஓன்று . இந்த  ஆறு  மேற்குத்  தொடர்ச்சி  மலையில்  களக்காடு பகுதியில்  செங்கல்தேறி  அருகே  பச்சையாற்றின்  பிறப்பிடத்திலிருந்து  தனியாகப் பிரிந்து  மணிமுத்தாறு  அருவியாக உருவானது .



மணிமுத்தாற்றின்  இணைப்பு 




                            

     இயற்கையாகவே  மணிமுத்தாறு  தாமிரபரணி ஆற்றின்  கிளை  ஆறாக  இருப்பதாலும்  அணைக்கட்டு  அதன்  குறுக்கே  கட்டப்பட்டிருப்பதாலும்  மேற்கண்டவாறு  வழங்கப்படுகிறது  .


                                  



    இது  மேற்குத்  தொடர்ச்சி  மலையில் தொடங்கி  கல்லிடைக்குறிச்சி மற்றும்  அம்பாசமுத்திரம்  அருகே  தாமிரபரணி  ஆற்றில்  கலக்கிறது .  இதன்  இன்னொரு  கிளை  கோதை  ஆறாக  கன்னியாகுமரி  மாவட்டத்தின்  மேற்கு  பகுதிகளில்  பாய்ந்து  அரபிக்கடலில்  கலக்கிறது .



நீர் மட்டம் உயர்வு 

      இந்த  ஆறு  மேற்குத்  தொடர்ச்சி  மலையில்  களக்காடு  பகுதியில்  செங்கல்தேரி  அருகே  பச்சையாற்றின்  பிறப்பிடத்திலிருந்து  தனியாகப் பிரிந்து  மணிமுத்தாறு  அருவியாக  மணிமுத்தாறு  அணைக்கட்டில்  வந்து  விழுகிறது .


                           

       இந்த  நீர்  மழைக்காலத்தில்  தாமிரபரணியில்  கலந்து  வீணாகக்  கடலில்  கலப்பதைப்  தடுக்க அப்போதைய  தமிழக  முதல்வர்  காமராசரால்   கொண்டு  வரப்பட்ட  அனைத்  திட்டம்  இது ,  சிங்கம்பட்டி   அருகே  1958 ஆம்  ஆண்டு  அமைக்கப்பட்டது  இந்த  அணை .  

   இந்த  அணையில்  118  அடிவரை நீரைத்  தேக்கலாம் . அணையில்  5,511  மில்லியன்  கன அடி  கொள்ளளவுடையதாகும் .  அணையின்  மொத்த  நீளம்  3.கி .மீ .

அணையின்  இணைப்பு 

   அணையில்  தேக்கப்படும்  நீரின்  மூலம்  திருநெல்வேலி  மாவட்டத்தில்  தெற்கு வீரவநல்லூர் ,கரிசல்பட்டி  மற்றும் பச்சையாறு பாசனம்  பெறாத நாங்குநேரி  தாலூக்காவின்  வடக்குப்  பகுதிகள் , திசையன்விளை  ஆகிய  பகுதிகளில்  சுமார்  65,000   ஏக்கர்  நிலங்கள்  பாசன  வசதி  பெறுகின்றன .


   
                            

        மேற்கண்ட  பகுதிகளுக்குக்  குடிநீர்  ஆதாரமாக  எந்த அணை  உள்ளது .  மணிமுத்தாறு   அணைக்கட்டு  மற்றும்  அருவி  ஆகியவை  சிறந்த  சிற்றுலாத்  தலமாக  விளங்குகின்றன .

காமராசரின் திட்டம் 

      சாதாரண  காலங்களில்  எந்த நீரின்  அளவை  தாமிரபரணியுடன்  ஒப்பிடும்பொழுது  மிகவும் குறைவு  என்பதால்  இது  வெறும்  மழைக்கால  வெள்ளநீர்  வெளியேற்று  ஆறாகவே  இருந்து  வந்தது .  எனவே  மழைக்காலங்களில்  இந்த  வெள்ளநீர்  தாமிரபரணியில்  கலந்து  வீணாக  கடலில்  கலப்பதை  தடுக்க காமராசரால் கொண்டு  வரப்பட்ட  திட்டமே  மணிமுத்தாறு  திட்டம் .




                         


     இதன்  மூலம்  சேமிக்கப்படும்  நீர்  நெல்லை  மாவட்டத்தின்  வறட்சிப்  பகுதிகளான தெற்கு  வீரநல்லூர் , கரிசல்பட்டி  மற்றும்  பச்சையாறு  பாசனம்  பெறாத  நாங்குநேரி  தாலுகாவின்  வடக்குப்  பகுதிகள்  வழியாக  மிகவும்  வறட்சிப்  பகுதிகளான  திசையன்விளை  மற்றும்  அதன்  சுற்று  வட்டாரப்  பகுதிகளுக்கு  குடிநீராகவும்  விவசாயத்திற்கும்  பயன்படுகிறது .



மணிமுத்தாறு பேரூராட்சி 



      அணைக்கட்டு  மற்றும்  அருவி  நல்ல  சுற்றுலாத்  தலங்களாக  அமைகிறது .  மேலும்  தமிழ்நாடு  காவல்துறையின்   இரண்டு  காவலர்  பயிற்சி  பள்ளிகள்   இங்கு  செயல்படுகின்றன . 




                         




         பொதுமக்கள்  இங்கு  சிறிதளவே   வாழ்கின்றன .மலைப்  பகுதியான  மாஞ்சோலை  மற்றும்  கோதையாருக்கு  மணிமுத்தாறே  நுழைவு  வாயில்  என்பதால்  மணிமுத்தாறு   ,மாஞ்சோலை , கோதையாறு  பகுதிகளை  இணைத்து  மணிமுத்தாறு  சிறப்புநிலை  பேரூராட்சி  அமைக்கப்பட்டுள்ளது .




நீர் மட்டம் 





                               


      சேர்வலாறு  அணையில்  இருந்து  1659  கன அடி , கடனாநதி  அணையில்  இருந்து  366 கன  அடி  ,ராமநதி  அணையிலிருந்து   158.46  கன அடி , கருப்பா நதி  அணையில் இருந்து  150 கன அடி  உபரிநீர்  திறக்கப்பட்டுள்ளது .


No comments:

Post a Comment

நொய்யலாறு

நொய்யலாறு :     தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ,சிற்றோடைகள...