பெயர்க்காரணம்
சிறுவாணி நதி கோயம்பத்தூர் நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும் , உலகில் மிக சுவையான துய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றாகும் .
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகாவில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் இந்நதி துவங்குகிறது .
இது பவானி ஆற்றின் துணை நதியாகும் . இந்நதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நுழையும்போது குண்டாற்றுடன் சேருகிறது
சிறுவாணி அருவி
சிறுவாணி அருவி
சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றாலம் என்பது கோயம்புத்தூர் நகரின் மேற்கே 35 கி .மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது .
இந்த அருவி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் உள்ளது . பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை .
சிறுவாணி அணை என்பது கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 46கி .மீ தொலைவில் அமைந்துள்ள அணையாகும் .இந்த அணை தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி நதிக்குக் குறுக்கே கட்டப்பட்டது இந்த அனையயைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும் .
முத்திகுளம் மலை இந்த அனைக்குக் கிழக்கு புறம் அமைந்துள்ளது .இயற்கையான நீர்வீழ்ச்சி இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும் .அணையும் நீர்வீழ்ச்சியும் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும் .
சிறுவாணி அணை
கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம் , வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில் ,1969 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் கேரளா அரசும் ஆய்வுகள் நடத்தி ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர் .
இதன்படி கோவை நகரின் வீட்டு , சமூக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவையான நீரைத்தேக்கிட (1300 மில்லியன் கனஅடி ) கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது .
இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக கட்டப்பட்டது . இதனால் அமராவதி அணை நீர் மட்டம் உயர்ந்து உள்ளது .
சிறுவாணி அணை உயர்வு
சிறுவாணி அணை உயர்வு
தற்போது அணையில் 63.32 அடி தண்ணீர் உள்ளது . திருமூர்த்தி அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது .
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மலை காரணமாக அங்குள்ள எமரால்டு அணை நிரம்பி வருகிறது . அணையின் மொத்த கொள்ளளவு 184 அடியாகும் .தற்போது 135 அடி தண்ணீர் உள்ளது .
ஊட்டி பைக்காரா அணையில் தற்போதைய நிலவரப்படி 85 அடி தண்ணீர் இருக்கிறது . ரேலியா அணையில் 41.8 அடி தண்ணீர் உள்ளது .
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மலை காரணமாக பேரூர் படித்துறையை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது .
குளங்கள் இணைப்பு
குளங்கள் இணைப்பு
மேலும் பேரூர் சொட்டையாண்டி குட்டை , சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை , செங்களம் , நரசாம்பதி குளம் , கோளரம்படி குளம், நொய்யல் ஆற்றின் முதல் குளமான உக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வருகிறது . ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அவைகளும் வீக்கமாக நிரம்பி வருகிறது .
சிறுவாணி அணை நிரப்பி வருவதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை குற்றாலத்துக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது . அங்குள்ள இரும்பு பாலம் வரை தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட உள்ளது . கோவை , நீலகிரி மாவட்ட எல்லை வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும் . இந்த அணையில் தற்போது 97 அடி தண்ணீர் உள்ளது .
அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது . இதனால் பவானி ஆற்றில் 5-வது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது .
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது . பருவ மழை காரணமாக இந்த அணை கடந்த 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது . இந்த அணையில் தேக்கப்டும் தண்ணீர் பழைய ,புதிய ஆயக்கட்டு , பாசனத்துக்கும் கேரளாவுக்கும் பகிர்ந்து தரப்படும் .
தொடர் மழை காரணமாக கோவை , திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகள் , குளங்கள் நிரம்பி வருகிறது .
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது . இதனால் இம்மாவட்டங்களில் உள்ள அணைகள் , குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது .
கோவை மக்களின் நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை கேரள வன பகுதியில் உள்ளது .
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது . இந்த அணையில் தற்போது 30.7 அடி தண்ணீர் உள்ளது . இன்னும் 19.3 அடி நீர் வந்தால் அணை முழுவதும் நிரம்பும் .
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது . இந்த அணையில் தற்போது 30.7 அடி தண்ணீர் உள்ளது . இன்னும் 19.3 அடி நீர் வந்தால் அணை முழுவதும் நிரம்பும் .
No comments:
Post a Comment