Sunday, 19 August 2018

நொய்யலாறு

நொய்யலாறு :

 

 

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்,சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு,கிழக்குநோக்கி பேரூர்,குனியமுத்தூர்,வெள்ளலூர்,இருகூர்,சூலூர்,மங்கலம்,திருப்பூர்,ஒரத்துப்பாளையம்,
 என 180 கிலோமீட்டர் பயணித்து,கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவேரி ஆற்றுடன் கலக்கிறது.இந்த ஆற்றின் சங்க காலப் பெயர் காஞ்சியாறு .

தோற்ற்றமும் ஆற்றின் போக்கும் :

           கோவையில் நொய்யல் ஆறு என நாம் குறிப்பிட்டால் இப்போது இருக்கும் மக்களுக்கு அது சிறுவாணி அணை என நினைக்கின்றனர்.பலரும் நொய்யல் என்றால் தண்ணீரே வராதஒரு ஆறு என நினைக்கின்றனர்.
ஆனால் உண்மை அதுவல்ல.எத்தனையோ தடைகளை கடந்து கோவையை நோக்கி வரும் நொய்யலுக்கு ஒரு பின்னணி உண்டு. நொய்யல் ஆறு எங்கிருந்து எப்படி உருவாகிறது என தெரிந்தால் அதை நாம் போற்ற துவங்கி விடுவோம்.
கோவைக்கு மேற்க்கே,மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் உருவாகிறது. இப்படி 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து அது குஞ்சரான் முடி என பெயர் பெற்று மலைகளில் இருந்து பெரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுதான் சிறுவாணி அடிவாரத்தில் காணும் பெரியாறு.இங்குதான் குற்றாலம் அருவி உள்ளது .
வடபுறத்தில் ஏறத்தாழ வெள்ளிங்கிரி மலையிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் பெய்யும்  மலை,5 ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும் பெரியாற்றுடன் செம்மேடு அருகே ஒன்று சேர்கிறது.


இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என அழைக்கப்படுவதில்லை.இத்துடன் தூத்துமலை ஓடை,கொடுவாய்புடி ஓடை,பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது.இந்த சின்னாறு சாடிவயல் வழியாக பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது.
பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்து வரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி ஆற்றில் தான் வைதேகி உள்ளது.
தொம்பிலிபாளையத்தில்  ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என்ற பெயர் பெறுகிறது.பின்னர் பேரூர்,கோவை நகர்,சூலூர்,திருப்பூர்,கொடுமணல்,காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யலின் நீளம் 180 கிலோ மீட்டர் இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32.நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறையாக பயன்படுத்தினால் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வரத்து.நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து  அங்கிருந்து சிறிய வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. நொய்யலில் பெரும் வெள்ளம் செல்லும்போது பலரும் இந்த நீரை அப்படியே குளங்களுக்கு திருப்பினால் என்ன என கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது.காரணம்  நொய்யல் ஆற்றில் ஒரு மணி அதன் வேகம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இந்த நீரை தடுக்க இயலாமல் குளமே காணாமல் போய்விடும். எனவே தான் நொய்யல் ஆற்றுநீரை தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது .

கொங்கு நாட்டின் அடையாளம் :

                    மனித குலம் ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரீகம் வளர முக்கிய காரணமாக இருந்தவை ஆறுகளே. உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் அடையாளமாக அங்கு பாயும் ஆறு விளங்குகிறது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக அங்கு பாயும் ஆறு விளங்குகிறது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும்,அங்கு  விவசாயம் வளமாக அமையாகக் காரணமாகவும் இருந்தது நொய்யல் ஆறு. தொல்லியல்  பழமைவாய்ந்த கொடுமணல் இவ்வற்றின் கரையில் தான் அமைந்துள்ளது.

ஆக்கிரமிப்பும் மாசுபாடும் :

மூன்று மாவட்டங்கள் வழியாக 180 கிலோ மீட்டர் தூரம் எந்த தடையும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி தற்போது பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளால் கோவையின் எல்லையை கடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்று.கோயம்புத்தூர் நகரைக் கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கழிக்கின்றனர். திருப்பூரை கடக்கும்போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இவ்வாற்றை மிகவும் மாசடைய செய்கின்றனர். சுத்திகரிக்கப்படாத சாயப் பட்டறை கழிவுகளால் அதிக அளவு அமிலங்கள் சேர்ந்து திருப்பூருக்கு பின் நொய்யல் ஆறு வேளாண்மைக்கும் குடிப்பதற்கும் ஆகாத நிலை உள்ளது. மனிதர்களுக்கும்,மண்ணிற்கும் பயன்படாத ஆறாக மாறியதால் நொய்யலை இறந்த ஆறு என்றே கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இக்கழிவுகள்  எல்லாம் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கி அப்பகுதியின் நீர் நிலைகளை மோசமாக மாசுபடுத்தியுள்ளனர்.அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர் .ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைபாட்டை எடுத்துள்ள  உச்சநீதி மன்றம்,சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றினில் கலக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது. போராட்டங்கள்,நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை ஆற்றில் கலந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிறுவாணியும், நொய்யலும்: 

                   உலகில்   இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தில் உள்ளது. அதே  பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்றி 
சாக்கடை,ரசாயனக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர், தமிழர்கள்.

செய்ய வேண்டியவை :

               
    பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பிற்கு சென்ற நொய்யலாற்றை மீட்டெடுக்க கோவை,திருப்பூர்,ஈரோடுமாவட்ட இயற்கை ஆர்வலர்கள்,விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை 
 முழமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும்,மாநகராட்சியும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.மேலும்  நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடிநீர் அதிகமாகி நொய்யல் நொய்யல் மீண்டும் உயிர் பெறும்.நூற்றாண்டுகளாக  அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக பிரச்ச்சனைகள் சந்தித்துவரும் நிலையில் இருக்கும் நீராதாரங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது  அனைவரும் நினைவில் வேண்டிய ஒன்றாக உள்ளது.  

 

ஒன்று படுவோம்....!நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம் ....!

                  நதிகளை மீட்டெடுப்போம் .....!

Thursday, 16 August 2018

பாலாறு

பாலாறு   :

பாலாறு இந்தியாவின்  மூத்த ஆறுகளில் ஒன்று 
                                       
 


பாலாறு  பிறந்த நந்திதுர்கம் :

 

                கர்நாடக மாநிலத்தில்  சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலை பாலாற்றின் பிறப்பிடம் .கடல் மட்டத்தில் இருந்து 4,851 அடி
 உயரமுள்ளது .பெங்களுருவில் இருந்து சுமார் 60 கி.மீ.

தொலைவில்  இருக்கும் மிகக் சிறந்த கோடை வாசஸ்தலம்.

முன்னொரு காலத்தில் குஷ்மந்தகிரி என்று அழைக்கப்பட்ட நந்திமலையை,
சோழர்கள் ஆட்சிக்  காலத்தில் அனந்தகிரி  என்று அழைத்துள்ளனர்.சிவனின்  வாகனமான நந்தியின் தோற்றத்துடன்  இருந்த அனந்தகிரி மலை  பிற்காலத்தில் நந்திதுர்கமாக  பெயர் மாறியது.அடர்ந்த வனப் பகுதியாக இல்லாமல் சாதாரணமாக பசுமை நிறைந்த  மலையாக நந்திதுர்கம்  இருப்பது ஆச்சரியம் .அடிவாரத்தில் இருந்து மலையை நோக்கிய நந்தி சிலைதான் நந்திதுர்கத்துக்கு செல்லும் வழிகாட்டியாக இருக்கிறது.

வறண்டுபோன  ஊற்று :

                   நெல்லிக்காய் பசவன்னா  சிலைக்கு அருகில் பிரம்மாசிரமத்திலிருந்து சற்று தூரத்தில் பாலாறின் நதி மூலம் இருக்கிறது. 4,800 அடி உயரத்தில் இருக்கும் இந்த ஊற்றில் பொங்கி வரும் பாலாற்றுக்கு கல் மண்டபம் கட்டியுள்ளனர். இது இன்று பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது.இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து விடும் அபாயமும்  இருக்கிறது .
ஊற்றில் பொங்கிப் பெருக்கெடுத்த பாலாறு  மலை அடிவாரத்தை நோக்கி ஓடைகளாய் பாய்கிறது.பெரிய அளவிலான ஓடைகள் இல்லாவிட்டாலும் 
சிறு சிறு ஓடைகள் அருகில் இருக்கும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுகிறது.
கோடை  வாசஸ்தலம் என்ற சுற்றுலா அடையாளத்தால் வேகமாய் வளர்ந்து வரும் கான்கிரிட் கட்டிடங்களால் நந்திதுர்கத்தின் அடையாளங்களும் பாலாறின் மூலமும்  சிதைந்து கொண்டிருக்கிறது.



 நீர் பாசன வசதி பெரும் பகுதிகள்  :

     பாலாறு 50 குடிநீர்த் திட்டங்களுக்கு ஆதாரமாக  உள்ளது.தாம்பரம்,பல்லாவரம் ஆகிய பகுதிகளும் இதில்  உள்ளடக்கம்.இத்திட்டத்தின் மூலம் வெள்ளப் பெருக்கு காலங்களில் பெண்ணையாற்றில் இருந்து  3 டி .எம் .சி  உபரி நீர்  பாலாற்றில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இணைப்பு கால்வாய் வழியாக திருப்பி விடப்படும்.

இத்திட்டத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு குடிநீர் வசதி மற்றும் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.

       
          
திருநெல்வேலி                                                               

வேலூர் மாவட்டம் புல்லூர் பாலாறு :

தமிழ்நாட்டில் மட்டுமே  சமதளத்தில்  பாலாறு பரந்து விரிகிறது. இங்கு
தொடங்கி 222 கி.மீ. தூரம் பயணிக்கும் பாலாறு வயலூர் வரை பயணிக்கிறது.கோடை காலத்தில் ஆற்றில் வெள்ளம் வராவிட்டாலும் விவசாயிகள்  நம்பிக்கைக்கு உரிய ஜீவநதியாக இருந்துள்ளது. ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்ததால் என்னவோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு அடுத்த நெல் உற்பத்தி செய்த மாவட்டம் என்ற பெருமை அப்போதைய வடாற்காடு (வேலூர் ,திருவண்ணாமலை) மாவட்டத்துக்கு  உண்டு.பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஊற்று கால்வாய் இருந்தது. ஆற்றின் கரையில் வெட்டினாலே ஏற்படும் ஊற்று நீரிலே  விவசாயம் செழித்திருக்கிறது.


நந்தி மலையில் சிற்றாறாக வரும் பாலாறு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழக எல்லைக்குள் நுழைகிறது.  வழியில் பல துணை ஆறுகளுடன் ஒன்றிணைந்து 386 கிலோ மீட்டர் பயணப்பட்டு செங்கல்பட்டின் உய்யாழிக்குப்பம் அருகே வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.

கி.பி .1857-ல் ஆற்காடு நகருக்குக் கிழக்கில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் வாலாஜாபேட்டை அருகில் பாலாற்றின் குறுக்கே அணை ஒன்று காட்டப்பட்டது . இங்கிருந்து காவேரிப் பாக்கம் ,பூண்டி,மாமண்டூர் ஏரிகளுக்கு நீர் பிரித்து அனுப்பப்படுகிறது. அந்த ஏரிகளின் பாசனம் பெரும் விவசாய நிலங்களும் அணை கட்டுக்கு அருகில் உள்ள சாத்தம்பாக்கம், குடிமல்லூர் , திருமலைச்சேரி போன்ற சுற்று வட்டாரக் கிராமத்து விவசாய நிலங்களும் விளைச்சலால் செழிப்போடு விளங்கின .
கடந்த  நூற்றாண்டின்  தொடக்கத்திலே கர்நாடக மாநிலத்தில் பாலாற்றின் தண்ணீர் வரத்து தடுக்கப்பட்டுவிட்டது . 1992-க்கு  பிறகு பாலாற்றில் நீர் வார்த்து குறைத்து போனது.

பாலாய் போன  பாலாறு : 

 பாலாற்றின் கரையோர நகரங்களில் தோல் பதனிடும் தொழில் பல ஆண்டுகளாகவே நடை பெற்று வருகிறது. பழங்காலத்தில் தோல் பதனிட மரப்பட்டைகள்,கடுக்காய்  கொட்டைகள் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டுதான் தோல் பதனிட்டார்கள். அதனால் எந்தவிதவிதமான பாதிப்பும் இல்லை. இப்போது 200-க்கும் மேற்பட்ட ரசாயணப் பொருட்களைப் 
பயன்படுத்திகிறார்கள் . அந்த ரசாயன கழிவுகள் எல்லாமே பாலாற்றில் தான் கலக்கின்றன. இது தவிர ஒவ்வொரு நாளும் ஏராளமான திடக் கழிவுப் பொருட்களும் பாலாற்றில் குப்பைகளாகக் கொட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் நச்ச்சுத்தன்மை அடைந்து பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்கள்  களர்நிலங்களாக மாறிவிட்டன.
விளைநிலங்களின்  பாதிப்பை தொடர்ந்து இந்தப் பகுதியில் குடிநீரும் சுவை மாறி மாசுபட்டுவிட்டது.  நகரங்களைப்  போல சுற்று வட்டார கிராம மக்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி குடிக்கவேண்டிய அவளை நிலைக்கு ஆளாகி உள்ளனர் . 
ரசாயண கழிவுகளாலும், மணல் கொள்ளையாலும் பாழாய் போகின்றது .
வேலூர்  மாவட்டத்தில் 1226 தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டத்தின் பங்கு 37 விழுக்காடு ஆகும். தோல்  தொழிற்சாலைகள் வெளியேற்றும்  சயனைடு ,பாதரசம்,குரோமியம் உள்ளிட்ட வேதியியல்  ரசாயன கலவைகள் நேரடியாக பாலாற்றில் கலக்கின்றன.
' காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையோரத்தில் சாக்கடையாக                       ஓடும்        பாலாறு     ' 

பாலாற்றில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் ராட்சத ஆழ்த்துளை கிணறுகள் மூலம் உறிஞ்சப்படுகின்றன . அதே போல பாயலூர் மற்றும் ஆயப்பாக்கம் கிராமங்களில் இருந்து கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
'காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள பாலாற்றுப் பாலம் சீமைக்கருவேல மரமாக மண்டிய அவலம் '

பாலாறு என்பது வட தமிழகத்தின் இயற்கை வளங்களை குவித்து வைத்திருக்கும் ஒரு பேருயிர் .அது உருவாக்கிய வளங்களும்,வாழ்க்கையும் சுற்றுச்சூழலும் ஏராளம். உலகமயத்தின் அகோரப்பசிக்காக இந்த ஆற்றின் மைந்தர்களும் அவர்கள்  உருவாக்கிய வாழ்க்கையும் இன்று அழிந்து கொண்டிருக்கிறது .

Wednesday, 15 August 2018

வைகை நதி


                                        வைகை நதி 

        வைகை அல்லது வைகையாறு  என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று.

                       

  வைகை  ஆற்றுப்படுகை  
          
       இவாற்றுப்படுகை 9º 15' மற்றும் 10º 05'  வடக்கு அட்ச ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரைதேனிதிண்டுக்கல்சிவகங்கைஇராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணைவைகை அணைசோத்துப்பாறை அணைமஞ்சளாறு அணைமருதநதி அணைசாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்.

துணை ஆறுகள்                                                                              சுருளியாறு,  தேனியாறுவரட்டாறுவராகநதிமஞ்சளாறுநாகலாறு,  மருதநதி 
சிறுமலையாறுசாத்தையாறுமுதலியவை வைகையின் துணை ஆறுகளாகும்.


                        


        பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன்(வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனி க்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
      
                       

                                      
  பின்னர் முல்லையாராக பயணிக்கிறது.இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது, பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாராக வைகை அணையைச்சென்று அடைகிறது.
         மேலும் கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாக சென்று வைகை அணை முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறுவராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும்

                      

 1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது. இந்த அணை ஆங்கிலப் பொறியாளரான பென்னி குக் என்பவரால் தனது சொந்தப் பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது

                       

   நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணைபார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.



                       
                                            
நதிக்கரையில் அமைந்துள்ள ஊர்கள் மற்றும் நகரங்கள் 


தீமைகள் 


                                                    
         இந்தப் பகுதியில் ஆற்று ஓரங்களில் இருக்கும் தென்னை மரங்கள் தங்களையே அழித்துக் கொண்டன. மணல் திட்டுக்கள் திருடப்படும் போது நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. தென்னை மரங்கள் என்பவை சல்லிவேர்த் தொகுப்பைக் கொண்டவை. அவற்வைறின் வேர்கள் ஆழமாகச் செல்லாது. எனவே நீர் மட்டம் குறையும் பொழுது அவற்றுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் பல ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து விட்டன.
      மணல் இருந்த வரை ஆற்றின் மணல் வழியே பயணித்துக் கொண்டு இருந்த ஆற்று நீர், மணல் இல்லாமல் வெறும் கற்களிலும், பாறைகளிலும் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே ஆற்றின் போக்கு மாறி அருகே இருந்த நிலங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. பல நூற்றுக்கணக்கான நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

                           

          வருடத்திற்கு முப்போகம் விளைந்தது இப்போது இந்த மணல் கொள்ளையால் ஒரு போகமும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தற்போது ஆற்றின் மணல் மட்டம் ஐம்பது அடிக்கும் கீழே சென்று விட்டதாலும், ஆற்றின் படுகை பாறையைத் தொட்டு விட்டதாலும், கிணற்றில் நீர் கிடைக்கவில்லை; எனவே பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி கிடக்கின்றன.



                               

        இந்த ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்து நகரங்களின் கழிவு நீரும் இந்த ஆற்றுடன் கலக்கும் படியான கழிவு நீர் வடிகால்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுவே இந்த ஆற்றின் மாசுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.    
                  





























காவேரி நதி

                             காவேரி நதி

                              

          
                       
                          



    காவிரி ஆறு என்பது இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளதுஅது கர்நாடக    மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில உற்பத்தி ஆகிறது.


காவிரி படுகை





   
   காவிரி படுகையின் நீளம் 81,155ச.கிமீ ஆகும். அதாவது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் இது 2.7 சதவீதம் ஆகும். இதில் கர்நாடகாவில் 34,273 ச.கிமீம் தமிழகத்தில் 43856 ச.கிமீ-ம், கேரளாவில் 2866 ச.கிமீ-ம், புதுச்சேரியில் 160 ச.கிமீ-ம் என நான்கு மாநிலங்களிலும் பிரிந்து காணப்படுகிறது.

பாயும் பகுதிகள்..


    கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வரும் காவிரி ஆறு, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.


                   
            




பயணம்  செய்யும் தூரம்...

   காவிரி ஆறு தலைக்காவிரியில் உற்பத்தியாகி, கடலில் கலப்பதற்கு இடைப்பட்ட தூரத்தில் சுமார் 800 கிமீ பயணம் செய்கிறது. இதில், 320 கிமீ கர்நாடகத்திலும், 416 கிமீ தமிழகத்திலும், 64 கிமீ கேரளத்திலும் உள்ளது. காவிரிப் படுகை கர்நாடகத்தில் மின்விசிறி போன்ற தோற்றத்திலும், தமிழகத்தில் இலை போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது. இந்த வடிவமைப்பின் காரணமாக காவிரி நீரானது அதிக வெள்ளப்பெருக்கு அல்லது சீக்கிரம் வற்றி விடும் சூழல் போன்றவற்றை உருவாக்குவது இல்லை.


நீர் பெறும் காலம்...


   இந்த படுகையானது  கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் போது அதிக நீரையும், வடகிழக்கு பருவமழையின் போது ஒரு பகுதி நீரையும் பெற்று வருகிறது. இதேபோல் தமிழக படுகையானது வடகிழக்கு பருவமழையின் போது அதிக நீரைப் பெறுகிறது.

இரு ஆறுகளாக பிரிகிறது...





         தமிழகத்தில் திருச்சியை கடக்கும் போது காவிரி ஆறு இரண்டு பாகங்களாகப் பிரிகிறது. அதில் வடக்கு கிளை கொள்ளிடம் என்றும், தெற்கு கிளை காவிரி என்ற பெயரிலும் பாய்கிறது. ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் 16 கிமீ பயணம் செய்து மீண்டும் ஸ்ரீரங்கத்தில் இணைகிறது.

துணை ஆறுகள்

         கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும். இதேபோல் பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.

                     
                   

அணைகள்         
        
      மேட்டூர் அணைகிருஷ்ணராஜ சாகர் அணைகல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

அருவிகள்



      கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.

தமிழகத்தில் காவேரி பாயும் பகுதிகள்

                     மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு 
வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. 





 மேட்டூரிலிருந்து வெளிவரும்  காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடுநகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. 


       அமராவதி ஆறானது கரூர்அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர்,திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். 





  முசிறிகுளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையைஅடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. வட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. 


               கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம்,காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை         உருவாக்கியபின்        காவிரியானது 
கல்லணையை அடைகிறது. 


                   கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன.

பயன்கள் 
                       


       காவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும்    நீர்மின் உற்பத்திக்காகவும்       முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

      காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.


      காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.

நொய்யலாறு

நொய்யலாறு :     தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ,சிற்றோடைகள...